>

Monday, May 18, 2009

பிரபாகரன் எங்கே பொட்டு அம்மான் எங்கே – புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதா கேள்விகளால் ஒரு வேள்வி

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் புலனாய்வுத்துறையின் 2ம் நிலைத் தலைவர் கபில் அம்மான் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அரசாங்க ஊடகங்கள் அரச சார்பு ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால் இன்று இந்திய நேரம் பிற்பகல் என்டிரிவி தொலைக்காட்சிக்கு செவ்வியளித்த ராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார விடுதலைப்புலிகளின் தலைவர் கொல்லப்பட்டாரா என்பதனை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்வதாகவும் அது குறித்த அறிவிப்பு அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஊடகங்களையும் பாதுகாப்புத் தரப்பினரையும் மேற்கோள் காட்டி ஏஎப்பி, ரொயிட்டர், பிபிசி உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களும் தகவல்களை வெளியிட்டுள்ளன. எனினும் பிபிசி வெளியிட்ட மற்றுமொரு செய்தியில் அரசாங்கத்தின் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக தெரிவித்திருந்தது.

இன்றைய இலங்கை ஊடகங்களின் இரவுச் செய்தியில் புலிகளின் தலைவரோ புலனாய்வுத் தலைவரோ புலனாய்வுப் பிரிவின் 2ம் நிலைத் தலைவரோ கொல்லப்பட்டதான செய்திகள் எதனையும்; வெளியிடவில்லை.

அத்துடன் இலங்கைத் தொலைக்காட்சிகளில் அரசாங்கத்தினால் காட்டப்பட்ட புலிகளின் சடலங்களில் முக்கியஸ்தர்கள் எவருடைய சடலங்களையும் காணவில்லை என விடுதலைப் புலிகளுடன் நெருக்கமான தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home