>

Monday, May 18, 2009

விடுதலைப் புலி தலைவர்களின் மரணம் குறித்த விஞ்ஞானபூர்வ சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் ‐ இந்தியா

தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்களின் மரணம் குறித்த விஞ்ஞானபூர்வ சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென இந்திய அரசாங்கம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்துள்ளமையை விஞ்ஞானபூர்வமாக நிரூபித்தால், ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான வழக்கை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் மற்றும் பெண்கள் பிரிவு தலைவி அகிலா ஆகியோர் 1991ம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மீது நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளாக இந்திய நீதிமன்றம் அறிவித்திருந்தது.

மேலும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home