>

Tuesday, May 19, 2009

இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு மாபெரும் படுகொலை

இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு மாபெரும் படுகொலையே நடந்து முடிந்திருக்கிறது எந்தத் தரப்பிற்கும் கொண்டாடுவதற்கு எதுவுமில்லை ‐ பாரா மிஹிலார்: மொழியாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:





பாரா மிஹிலார் ‐ சிறுபான்மையினர் உரிமைகளுக்காகப் போராடும் சர்வதேச குழுவைச் சேர்ந்தவர்.


இன்று ஒரு முக்கியமான நாள். பெரும்பாலான இலங்கையர்கள் போல நானும் கொண்டாட வேண்டும். தமிழ்ப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் பயத்தின் மத்தியில் கொழும்பில் வளர்ந்த ஒரு முஸ்லிம் நான்.

புலிகள் அறுபதாயிரம் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்தார்கள் அவர்களுடைய வாழிடங்களிலிருந்து. அவர்களுடைய பிரச்சாரம் மிகப் பயங்கரமானது.
ஆனால், நான் புலிகளின் பிரதேசங்களுக்குப் பிரயாணம் செய்யும் போது பொதுமக்கள் மிகப் பலம் பொருந்திய எதிரியை எதிர்கொள்கிறார்கள் என உணர்ந்தேன். நான் அங்கு சந்தித்த சிறுவர்கள் விமானப்படை விமானங்கள் தங்கள் வீடுகள் மீது குண்டு போடும் காட்சியை வரைந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

நூற்றுக்கணக்கான பெண்கள் தமது கணவன்மாரை இழந்திருந்தார்கள். அவர்கள் ஒன்றில் கொல்லப்பட்டிருந்தார்கள். அல்லது காணாமல் போயிருந்தார்கள். அல்லது கடத்தப்பட்டிருந்தார்கள். அதுவுமில்லாவிட்டால் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்கள். நாட்டின் இன்னொரு பகுதியின் வெளிவராத அருவருக்கத்தக்க ஒரு துயர் நிகழ்வு அது.

இவையெல்லாம் கற்பனை வரலாறு போல் உள்ளது. மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு மாபெரும் படுகொலையே நடந்து முடிந்திருக்கிறது என்பதைக் கண்டு கொள்ளாமல் எப்படி எனது மக்கள் எனது குடும்பத்தினர், எனது நண்பர்கள் தங்களது கண்களைத் தாங்களே மூடிக் கொண்டிருக்கிறார்கள் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மேலும்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home